திருச்சி அருகே திருவெறும்பூர் எனும் ஊரில் அமைந்துள்ளது அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில். இந்த சிவாலயம் 1000-2000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது.

இந்த கோயிலில் இருக்கும் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். நவகிரக சன்னதியில் சூரிய பகவான் அவரது மனைவியர்களான உஷா, பிரதியுஷா இரண்டு பேரும் நேருக்கு நேர் பார்த்த படி அமைந்துள்ளார். இந்த கோயிலுக்கு இடது பக்கத்தில் கைலாசநாதர் தனிக்கோயிலில் இருக்கிறார்.

இந்த தலத்தில் பிரம்ம தீர்த்தம், பதும தீர்த்தம், மது தீர்த்தம், குமார தீர்த்தம் எனும் 4 தீர்த்தங்கள் இருக்கும். ஆதிஷேசனுக்கும், வாயு பகவானுக்கும் நடுவில் யார் பெரியவர் எனும் போட்டி வந்த போது வாயு பகவானால் பெயர்க்கப்பட்ட மேரு மலையின் ஒரு பகுதி தான் இங்கு மலையாக இருக்கு.

கருவறைக்கு பின் பக்கத்தில் 2 காசி விஸ்வநாதர் சன்னதிக்கும் நடுவில் சண்முக சுப்ரமணியர் தனி சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். இவரோடு பீடத்திற்கு கீழ் அறுகோண சக்கர வடிவம் இருக்கிறது. சுவாமியையும், இந்த சக்கரத்தையும் வழிபடுபவர்களுக்கு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை…