ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையும் அதன் கிரக நிலைகளின் அமைப்பை பொருத்தே அமையும். ஒருவரின், எதிர்காலத்தை ஜோதிடத்தை அடிப்படையாக கொண்டு கணித்திட முடியும். ஒருவரது செயல்பாடுகள், சுபாவம், வெற்றி, கஷ்டம் என அனைத்தையுமே ஒருவரது ஜாதகத்தை அடிப்படையாக கொண்ட ஓரளவிற்கு கணிக்கலாம். அதே வழியில், சில ராசிக்காரர்கள் ஜாதக அமைப்பின் மூலம் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பர். எப்படிப்பட்ட சூழலையும் இவர்கள் சுலபமாக எதிர்கொண்டு வெற்றிக்கு மேல் வெற்றியைப் பெறுவார்கள். இவர்கள் வறுமையின் நிழல் கூட நெருங்காது. நிதி நெருக்கடி கூட இவர்களுக்கு மிக அரிதாகவே ஏற்படும். ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், வாழ்வில் எப்போதும் செல்வ செழிப்புடன் வாழக்கூடிய ராசிக்காரர்கள் யார் என்பதைப் பற்றி தான் இப்போது இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்…

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் எல்லா இன்பங்களையும் அனுபவிக்க கூடியவர்கள். இவர்கள் பெரும் செல்வந்தர்களாகவும், அதிர்ஷ்டசாலிகளாகவும் இருப்பர். ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலை எப்போதும் வலுவாக இருக்கும். இவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பர். மேலும், இவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.

கடகம்
ஜோதிட சாஸ்திரப்படி கடக ராசிக்காரர்கள் செல்வந்தர்களாக திகழ்கிறார்கள். இவர்களுக்கு எந்தவிதமான நிதிப் பிரச்சனையும் இருக்காது. இவர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெற்றிருப்பார்கள். அதுதவிர, இவர்கள் செய்யும் பணிகளில் வெற்றி பெற மிகவும் கடுமையாக உழைக்கக்கூடியவர்கள். மேலும், இவர்களுக்கு வாழ்க்கையில் எதிலும் குறை என்பதே இருக்காது.

சிம்மம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பொருளாதார பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். இவர்கள் கடின உழைப்பாளிகள் என்பதால் இவர்களுக்கு எந்தவிதமான நிதிப் பிரச்சனையும் இருக்காது. மேலும், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். சிம்ம ராசிக்காரர்கள் பொதுவாகே பிறரது மனதை கவரும் ஆற்றம் பெற்றவர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் பிறப்பிலேயே அதிர்ஷ்டசாலிகள். இவர்களின் நிதி நிலைமை மிகவும் வலுவானதாக இருக்கும். விருச்சிக ராசிக்காரர்கள் நேர்மையான குணம் கொண்டவர்களாக திகழ்வர். எதிலும் குறுக்கு வழியைப் பின்பற்றுவது இவர்களுக்கு பிடிக்காத ஒன்று, நேர்மையாக செயல்பட்டு எடுத்த காரியத்தை முடித்து காட்டுவர். மேலும், இவர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுகிறார்கள்.